Search This Blog

Friday, March 01, 2019

கட்டிட பொறியாளர் (Civil Engineer)


Sri Thirupathi Industry
Salem

பணியிடங்கள் : 20 Start date : 28-02-2019 End date : 29-03-2019

குறிப்பு : 2018 ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9597696166,753994156 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Job Details
முகவரி
1/259, மெய்யனூர் ரோடு, கோகுலம் மருத்துவமனை எதிரில், 5 ரோடு, சேலம் - 4.
தொடர்பு எண்   9597696166

தகுதி
B.E Civil Engineering,B.E
அனுபவம்
Both Fresher and Experience 0-10 year(s)
சம்பளம்
AS PER COMPANY NORMS
திறன்கள்
Time Management,Interpersonal Skills,Communication Skills,Diplomatic




ரயில்வே துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு!


ரயில்வே துறையில் ஒரு லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நிரப்ப ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.


ரயில்வே துறையில் ஒரு லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நிரப்ப ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய பணியிடங்களையும் உருவாக்க பிரதமர் மோடி திட்டங்களை வகுத்து வருகிறார்.

அந்தவகையில் முதல் கட்டமாக ரயில்வே துறையில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது;

பணியிடங்கள்!
லேட்டஸ்ட் கருத்துகள்

ரயில்வே துறையின் குரூப் -டி பிரிவில் 63 ஆயிரம் பேரும், லோகோ பைலட், தொழில்நுட்ப பிரிவில் 26 ஆயிரம் பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் தகுதி!
18 வயது முதல் 31 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு அல்லது ஐடிஐயில் (NCVT/SCVT) படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்!
பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.500ம், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் திருநங்கைகள் ரூ. 250ம் விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் - ரூ. 250.
விண்ணப்பிக்கும் தேதி!
குரூப்-டி பிரிவுக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி வரையும், லோகோ பைலட் பணி இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி வரையும் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம், விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வும் ஆன்-லைன் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களை வருகிற மே மாதத்துக்குள் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே துறையில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது

விண்ணப் பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் 04.04.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Sunday, July 29, 2018


சென்னை-சித்தூர் பசுமை வழிச்சாலை: நிலம் கையகப்படுத்தல் துவங்க இருக்கிறது

Sunday, 29 Jul, 9.48 am
சென்னை சித்தூர் இடையே அமையவிருக்கும் பசுமைவழிச்சாலைக்காக 850 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்க இருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து சார்பில் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கப் பட்டுவருகிறது. விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் இந்த சாலைக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனஆலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பசுமை வழிச் சாலை அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னை - சித்தூருக்கு இடையே ரூ. 3,200 கோடி செலவில் பசுமை வழிச் சாலை அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 126 கிலோ மீட்டர் தூரத் துக்கு இந்த சாலை அமைக்கப்பட இருக்கிறது

Friday, May 25, 2018

இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது!"







``இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது!" - `நமக்கு நாமே' ஐடியா சொல்லும் இளைஞர்

``வருங்காலத்தில் சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எல்லோரும் பயணிக்கவும் சொந்த கார் இருக்கும். ஆனால், பருக சொட்டு நீர் கிடைக்காது" என்று அபாயச் சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறார்கள் உலகளாவிய சூழலியாளர்கள். அதற்கு, அச்சாரம் சொல்லும்விதமாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் மக்கள் வெளியேறும் கொடுமை நடக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலை வரும் காலம் வெகுதூரமில்லை. இந்நிலையில், ``மழைநீரைச் சேமித்தால் பத்து வருடங்கள் வரை அதை வைத்துப் பருகலாம். இங்கே ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தடுக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி" என்று அடித்துச் சொல்கிறார் கருப்பசாமி.
நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான இவர், சிவகாசியில் உள்ள தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பைச் செய்திருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நம்மாழ்வார் துயில் கொள்ளும் வானகத்துக்கு வந்த கருப்பசாமியைச் சந்தித்துப் பேசினோம்.
`` `இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை. மனிதர்கள்தாம் இயற்கைக்கு எதிராகத்
தொடர்ந்து செயல்பட்டு, பின்பு பிரச்னை வரும்போது இயற்கைமீது குறைசொல்லும் தவற்றைச் செய்கிறார்கள்'ன்னு அய்யா நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அதனால்தான், நான் அவரை முதன்முறையாகச் சந்தித்த 2009 ம் வருடத்திலிருந்து இயற்கையை விட்டு விலகாத, இயற்கையைச் சிதைக்காத வாழ்வை வாழ்ந்து வருகிறேன். விருதுநகர் மாவட்டம், சிவகாசிதான் எனக்குச் சொந்த ஊர். வருங்காலத்தின் மிகப்பெரிய பிரச்னையா உலகம் முழுக்க ஏற்படவிருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான். அதனால்தான், எனது வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டமைத்துள்ளேன். 2013 ம் ஆண்டு சிவகாசியில் வானகம் மற்றும் தேன்கனி, இயற்கை வாழ்வியல் அமைப்பினர் ஒருங்கிணைப்பில் நம்மாழ்வார் ஐயா தலைமையில் இயற்கை வாழ்வியல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் திருவாரூர் `மழைநீர்' வரதராஜன் ஐயா அவர்களும் கலந்துகொண்டார். அப்போது அவர் வீட்டின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரைச் சேகரிப்பது குறித்து தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.



அப்போது அவர், `தண்ணீர்ப் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லா தண்ணீரைக் கொடுத்திருக்கிறது; கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை' என்றார் வரதராஜன். எனக்குச் சுருக்கென்று உறைத்தது. எவ்வளவு பெரிய உண்மை. அதோடு அவர், `வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால்10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது'ன்னு சொன்னார். அப்போதே நான் வீடு கட்டும்போது, மழைநீர் சேகரிப்பு அமைப்பை அமைக்கணும்னு முடிவு பண்ணினேன். எல்லோரையும் மழைநீர் அமைப்பை அமைக்கச் சொல்லி வலியுறுத்தத் தொடங்கினேன். ஏனென்றால், தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமை வரும் என்று 20 வருடங்களுக்கு முன்பு யாரேனும் நினைத்துப் பார்த்திருப்போமா?. மழை நீர் சேகரிப்புதான் இதற்குச் சரியான மாற்று. சில ஆயிரங்கள் செலவழித்து மழை நீரைச் சேகரித்தால், வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்சென்ற பெரும் மனத் திருப்தி கிடைக்கும்.
கேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும்தான். உலகின் பல பெரு நகரங்களும் இந்த நிலைக்குச் சில வருடங்களில் வரும். இந்தத் தகவல் பலரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனி இயற்கையை அழிப்பதைத் நிறுத்திவிட்டு, மழைநீரை முறையாகப் பயன்படுத்தி இயற்கைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், நான் சிவகாசியில் கட்டியுள்ள வீட்டில் மழைநீர் சேமிப்பு அமைப்பை அமைத்து முடித்துள்ளேன். 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமைப்பு இது. சிறிதளவும் காற்று புகாதவாறு அமைத்துள்ளதால், பத்து வருடங்கள் கூட இதில் சேமிக்கப்படும் தண்ணீர் கெட்டுப் போகாது.
மழை நீர் வடிகட்டித் தொட்டி :

எங்கள் வீட்டில் செய்துள்ள அளவின் அடிப்படையைப் பகிர்கிறேன். வீட்டின் மேற்கூரையின் அளவைப் பொறுத்து, ஒரு வருடத்துக்கு வீட்டுக்குத் தேவையான மழைநீரைச் சேகரிப்பதற்கான பெரிய கொள்ளளவு தொட்டிகள் தயாரித்துக்கொள்ளவும். பின்னர்..
1. வடிகட்டிக்கான தொட்டியை, 4 முதல் 5 தட்டுகள் ( சல்லடையைத் தாங்கும் தாங்கிகள் வைக்க ) இருக்குமாறு செய்து கொள்ளவும். அதன் உயரம் குறைந்தது 1 அடியாக இருக்க வேண்டும்.
2. அதன்பின், துருப்பிடிக்காத சல்லடையை ( பிளாஸ்டிக்) வைத்து, அதன் மேல் வடிகட்டி வலை ஒன்று ( பிளாஸ்டிக் கொசுவலை அல்லது நைலான் சல்லடை) வைத்துக் கொள்ளவும்.
3. அதன் மேல் சிரட்டைக்கரித் துண்டுகளை (Activated Carbon) குறைந்தது 4 அங்குலம் அளவுக்கு இட்டு நிரப்பிக் கொள்ளவும்.
4. பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்குக் கூழாங்கற்கள், ஜல்லிக் கற்கள் வைத்து நிரப்பவும்.
5. அதன் பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்கு ஆற்று மண் வைத்து நிரப்பவும்.
6. கடைசித் தட்டில் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து விட்டால் முடிந்தது வேலை.
7. அதன் மேல் மழை நீர் வரும் குழாயைச் சிறு சிறு துவாரங்கள் இருக்குமாறு தயார் செய்யவும். இதன் மூலம் தண்ணீரின் வேகம் அதிகரித்தால், தண்ணீர் ஓரிடத்தில் விழுந்து மண் அரிப்பு ஏற்படாமல், பரவலாகத் தண்ணீர் வந்து வடிகட்டப்படும்.
8. வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் மழைநீர் சேமிக்கப்படும் தொட்டியை வடிவமைத்தோமேயானால், 10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது.
இந்த முறையில்,தண்ணீர்ப் பற்றாக்குறையை நமக்கு நாமே செலவில்லாமல் தீர்த்து, ஆரோக்கியமான குடிநீரை நம் எதிர்கால சந்ததிகளுக்கு உறுதிப்படுத்துவோம். இனி நம்மாழ்வார் ஐயா கூறியபடி, தண்ணீரை நிலத்தில் தேடாமல் வானத்தில் தேடுவோம்.
அதுதான், எதிர்காலத்தில் மிரட்டவிருக்கிற குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரே வழி. வீட்டுக்கு வீடு இந்த அமைப்பை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று முடித்தார்.





















Sunday, April 29, 2018

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கற்பூரம்...

இறை வழிபாட்டில் கற்பூரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பூஜையின் நிறைவாக கற்பூர ஆரத்தி காண்பிப்பது வழக்கம். கற்பூரத்தின் மகிமையை அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் அறிந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். வழிபாடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. சுவாசப் பையை சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. இதன் வாசனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை செய்யக்கூடியது.

கற்பூரத்தின் வாசனை மனதிற்கும், ஆன்மாவிற்கும் பிடித்தமானது என்று புராண நூல்கள் கூறுகின்றன.
கற்பூரம் ஆன்மாவிற்கு பிடித்த ஒளி, வாசனையை கொண்டிருக்கிறது. இதன் வாசனை மனதை ஒருநிலைப்படுத்தக்கூடியது.

நல்ல எண்ணங்கள், நல்ல உணர்வுகளை தூண்டக்கூடியது. அதனால் தான் கற்பூரத்தை ஆன்மிக சக்திக்காக பயன்படுத்துகிறார்கள். இதன் வாசனை அந்த இடத்தை சுற்றி பரவி இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கக்கூடியதன்மை கொண்டது.

கற்பூரம் எரிந்து அதன் வாசனை காற்றோடு கலக்கும்போது சுற்றி இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படும் பிளிச்சிங் பவுடர் செய்யும் பணியை கற்பூரம் செய்கிறது. அதாவது விரும்பத்தக்க நறுமணத்தை தருவதோடு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. உடலுக்கு நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றலையும் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இதன் வாசனை சுற்றுச்சூழலுக்கும் நன்மைபயக்கிறது. பல மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது, கற்பூரம்.

தோலில் ஏற்படும் பல வியாதிகளை இது குணமாக்குகிறது. அரிப்பு, சொறி, சிரங்கு, வெட்டுக்காயம், தீப்புண் போன்றவற்றிற்கு சுத்தமான கற்பூரத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து காலில் சேற்றுப்புண் தோன்றும் இடத்தில் தடவி வரலாம். உடனடி பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப்புண் ஏற்படாமலும் தடுக்கும்.

வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். சந்தனத்தில் கற்பூரத்தை குழைத்து பூசினால் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். கற்பூர எண்ணெய்யை முகத்திற்கு பயன்படுத்தலாம்.

கால் வெடிப்புகளை குணப்படுத்த கற்பூரம் சிறந்த மருந்து. அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் சிறிது கற்பூரத்தை போட்டு கலந்து கால்களை முக்கி வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால் கால் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகு பெறும்.

கற்பூரத்திற்கு தலைவலியை போக்கும் சக்தியும் இருக்கிறது. கற்பூரத்தை சந்தனம் அல்லது துளசி சாற்றில் குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி நீங்கிவிடும். எலுமிச்சை சாற்றில் சிறிது கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்தாலும் தலைவலி கட்டுப்படும். மூட்டுவலி, மூட்டு பிடிப்பு மற்றும் வாத நோயால் அவதிப்படுபவர்கள் கற்பூர எண்ணெய்யை தேய்த்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். தசைப்பிடிப்புக்கும் உபயோகிக்கலாம்.

முடி உதிர பல காரணங்கள் இருக்கின்றன. அதனை கட்டுப்படுத்தும் தன்மை கற்பூரத்திற்கு உண்டு. தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூர எண்ணெய்யை கலந்து தினமும் கூந்தலில் தேய்த்து வரலாம். கூந்தல் வளம் பெறும். வேர்களை உறுதியாக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். துளசி சாறில் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, பேன் தொல்லைகள் நீங்கும். நூறு கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 4 கிராம் கற்பூரத்தை கலந்து தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் பொகுடு தொல்லை அறவே நீங்கிவிடும்.

பல் வலியால் அவதிப்படுபவர்கள் கிராம்புடன் கற்பூரத்தை சேர்த்து தூளாக்கி வலியுள்ள இடத்தில் வைக்கலாம். பல் வீக்கம், வலி நீங்கும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் நல்ல பலன் தரும். பிறகு டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து வாயில் வைத்து அதன் சாற்றை சிறிது, சிறிதாக தொண்டைக்குள் இறக்கலாம். துர்நாற்றம் நீங்கிவிடும்.

தீக்காயத்தழும்பு, அம்மை தழும்பு, கொசு, பூச்சிக்கடி போன்றவற்றிற்கு கற்பூரம் நிவாரணம் தரும். தண்ணீரில் சிறிது கற்பூரத்தை கலந்து தழும்பு உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். நல்லெண்ணெய்யில் கற்பூரம் கலந்து பூச்சிக்கடி உள்ள பகுதியில் தடவினால் விஷம் நீங்கும். தழும்பு மறையும்.அடிக்கடி சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் குளிக்கும் முன்பு கற்பூரத்தை பயன்படுத்தலாம். ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி அதனுடன் கற்பூரம், நான்கைந்து மிளகை பொடித்து போட்டு சூடாக தலையில் தேய்த்து ஊறவிடலாம். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் நுரையீரலில் பரவி இருக்கும் சளி நீங்கி சுவாசம் சீராகும்.

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் நெய்யில் சிறிது கற்பூரத்தை கலந்து சூடாக்கி கால் பாதங்களில் தடவி மசாஜ் செய்து வரலாம். நல்ல தூக்கம் வரும்.

Monday, April 23, 2018

அன்பின் அரவணைப்பு உங்கள் குழந்தைக்கு

வணக்கம். சேவை உறவுகளே..

தங்கள் பகுதியில் பெற்றோரை இழந்த அல்லது வறுமையில் வாடும் 5 வயதுக்கு மேல் உள்ள ஆண் குழந்தைகள் இருப்பின் அறிமுகம் தந்து சிபாரிசு செய்யவும்.

இலவசமாக எங்கள் குழந்தையாக பராமரித்து ஆளாக்குவோம்.

தொடர்புக்கு: சுமைதாங்கி டிரஸ்ட்

9941776162

face book : sumaithaangitrust

காதில் ஏற்படும் காளான் தொற்று

ராமநாதபுரம் அருள் மெடிக்கல் சென்டர் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை டாக்டர் என்.தம்பி அருள், டாக்டர் சுகந்தா தம்பிதுரை கூறியதாவது:
மக்களிடம் பலவிதமான பழக்க வழக்கங்கள் தொன்று தொட்டு காணப்படுகின்றன. உதாரணமாக முள் வாங்கியால் காதைத் தோண்டுதல், காதில் ஊதி வண்டு எடுத்தல், எண்ணெய் கொப்பளித்தல் என சிலவற்றை சொல்லலாம். 

இன்றைய நாகரீக உலகில் 'பட்ஸ்' பயன்படுத்தி காது குடைதல், துடைத்தல் பரவலாக உள்ளது.
இதனால் ஒருவகை இன்ப உணர்வு ஏற்படுவதாகவும், பட்ஸ் காதுகளை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

மருத்துவ விஞ்ஞானத்தில் இதற்கு கீழ்கண்ட விளக்கங்கள் தரப்படுகிறது.

* இதயத்திற்கு செல்லும் வேக்ஸ் நரம்பு காதுகளில் இருப்பதால் சிற்றின்ப உணர்வு ஏற்படுகிறது.

* காதில் அழுக்கு என்பது இயற்கையாக காதில் ஊறும் எண்ணெய் போன்ற திரவம் ஆகும். இந்த அழுக்கை பொதுவாக அகற்ற வேண்டிய தேவையில்லை. ஆனால், பட்ஸ் மூலம் சுத்தம் செய்ய முயற்சிக்கிறோம். இதனால், அழுக்கு உள்ளே 
தள்ளப்படும். 

* பட்ஸ் உபயோகிப்பதால் காதில் சிறு சிறு காயங்கள் ஏற்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும், தட்ப வெப்பநிலை சாதகமாக இருப்பதாலும், காற்றில் உள்ள பூஞ்சான், காளான் விதைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் காளான் தொற்று எளிதில் ஏற்படுகிறது. பொதுவாக நீலம், கருப்பு மற்றும் வெள்ளை காளான்கள் காதுகளை அதிகம் தாக்குகின்றன.

அறிகுறி:
பாதிக்கப்பட்டவர்களுக்கு காது அரிப்பு, காது அடைப்பு, காது வலி, காதில் நீர்வடிதல் மற்றும் காதுகளில் இரைச்சல் இருக்கலாம்.
இதுபோன்ற அறிகுறி இருப்பவர்கள் பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்த்து முறையான சிகிச்சை பெற வேண்டும். பட்ஸா?, காதா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு கூறினர்.

Sunday, March 18, 2018

நீரே மருந்து செஞ்சு பாருங்க சந்தோஷமா இருங்க


🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿🚿
ஜப்பானிய நீர் சிகிச்சை

💧தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

💧தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்ற பானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

💧காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.

💧தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

👆இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

💊💉💴மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

🎈தலைவலி
🎈இரத்த அழுத்தம்
🎈 சோகை
🎈 கீல்வாதம்
🎈பொதுவான பக்கவாதம்
🎈ஊளைச்சதை
🎈 மூட்டுவலி
🎈 காதில் இரைச்சல்
🎈 இருதயப் படபடப்பு
🎈 மயக்கம்
🎈இருமல்
🎈 ஆஸ்த்மா
🎈 சளி
🎈 காசநோய்
🎈 மூளைக் காய்ச்சல்
🎈 கல்லீரல் நோய்கள்
🎈 சிறுநீரகக் கோளாறுகள்
🎈 பித்தக் கோளாறுகள்
🎈 வாயுக் கோளாறுகள்
🎈வயிற்றுப் பொருமல்
🎈 இரத்தக் கடுப்பு
🎈 மூலம்
🎈 மலச்சிக்கல்
🎈 உதிரப்போக்கு
🎈 நீரழிவு
🎈 கண் நோய்கள்
🎈 கண் சிவப்பு
🎈 ஒழுங்கில்லாத மாதவிடாய்
🎈 வெள்ளை படுதல்
🎈 கர்ப்பப்பை புற்றுநோய்
🎈 மார்புப் புற்றுநோய்
🎈 தொண்டை சம்பந்தமான நோய்கள்

😳நம்பவே முடியவில்லையே! சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.

🔬சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

🎐 மலச்சிக்கல் - ஒரே நாளில்
🎐 வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
🎐 சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
🎐 இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
🎐 புற்று நோய் - ஆறு மாதங்கள்
🎐 காசநோய் - மூன்று மாதங்கள்

நன்றி: The Health Service
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 படித்ததில் பிடித்தது.
பொன்மொழி

Wednesday, February 14, 2018

ரயில்வேயில் 1 லட்சம் பேருக்கு வேலை: ரயில்வே தேர்வு வாரியம் தொடர் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் வரும் மே மாதத்துக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதற்காக ரயில்வே தேர்வு வாரியம் தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், வரும் மக்களவைத் தேர்தலை 2019க்கு முன்பாக நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய பணியிடங்களையும் உருவாக்கி வேலைவாய்ப்பை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனடிப்படையில் முதலில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 502 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து தண்டவாள பராமரிப்பாளர், டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மென், எலக்ட்ரிக்கல், என்ஜினீயரிங், மெக்கானிக்கல், சிக்னல் மற்றும் தொலைதொடர்பு துறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான 62 ஆயிரத்து 907 "குரூப் டி" அறிவிப்பு மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி. அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ.களில் படித்திருக்க வேண்டும்.

அல்லது என்.சி.வி.டி. வழங்கிய தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரயில்வே பணிக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால் கையில் இருக்கும் இந்த வாய்ப்பை கைநழுவ விடாமல் இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெறவும்.

"குரூப் டி" பிரிவுக்கு அடுத்த மாதம் மார்ச்.12க்குள்ளும், லோகோ பைலட் பணியிடங்களுக்கு மார்ச் 5க்குள்ளும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் வயதுவரம்பு சலுகை, தகுதிகள், தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/downloads/cen-012018/detailed-cen-012018.pdf மற்றும்
http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/2/9/RRB-Recruitment-2018-62907-Group-D-Posts.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

All University UG and PG Syllabus